காதல் பற்றி நீ கண்டுபிடித்ததெவை?

Share On Facebook ! Share On Goole Plus ! Tweet This !


மக்களால் ஒவ்வொன்றின் பாகங்கள், தனித்தன்மைகள், தொடர்புகள், தாக்கங்கள், திரிபுகள், பயன்கள், மற்றும் மாற்றுகளைப் புலப்படுத்த முடியும். வேறெதைப் புலப்படுத்த முடியும்? ~Disclosables

  1. நாகர்கோவில், பிப். 15-

    கேரள மாநிலம் காட்டாக் கடையைச் சேர்ந்தவர் ஹசீனா (வயது 28). திருமணமாகி கணவனை பிரிந்து வாழ்ந்த இவர், கடந்த 13-ந்தேதி காட்டாக்கடையில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள களியக்காவிளையை அடுத்த படந்தாலு மூடு கல்லறைத் தோட்டத்தில் இறந்து கிடந்தார். களியக்காவிளை போலீசார் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    இதில், ஹசீனா திருவனந்தபுரத்தை அடுத்த கோவளம் கடற்கரையில் உள்ள மசாஜ் சென்டரில் வேலை பார்த்ததும் அப்போது இவருக்கு விபசார கும்பலுடன் தொடர்பு ஏற்பட்டு வாழ்க்கை தடம் மாறியதை தெரிந்து கொண்டனர்.

    மசாஜ் சென்டர் பழக்கம் மூலம் ஹசீனாவுக்கு கேரளாவின் சில முக்கிய பிரமுகர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. அவர்கள் ஹசீனாவை அடிக்கடி குமரி மாவட்டத்திற்கு அழைத்து வந்துள்ளனர். இதன் மூலம் ஹசீனாவிற்கு இங்குள்ள சில வாலிபர்களுடன் பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் கேரளா பிரமுகர்களுக்கு தெரியாமல் அடிக்கடி ஹசீனாவை காட்டாக்கடையில் இருந்து களியக்காவிளை, படந்தாலுமூடு, அருமனை, திற்பரப்பு உள்ளிட்ட பகுதிகளுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதனால் கேரள பிரமுகர்களுக்கும், குமரி வாலிபர்களுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு அது நீறுபூத்த நெருப்பாக புகைந்து கொண்டிருந்தது.

    இந்த நிலையில்தான் ஹசீனா படந்தாலுமூடு கல்லறைத் தோட்டத்தில் இறந்து கிடந்தார். இவர் எப்படி படந்தாலுமூடு வந்தார்? இவரை அழைத்து வந்தவர்கள் யார்? என்பது தெரியாமல் இருந்த நிலையில் போலீசார் விசாரணையை தொடர முடியாமல் தவித்தனர்.

    எனவே அவரது பிரேத பரிசோதனை அறிக்கை மூலம் சாவுக்கான உண்மை காரணத்தை தெரிந்து நடவடிக்கை எடுக்க திட்டமிட்டனர். பிரேத பரிசோதனையின் முதல் கட்ட முடிவில் ஹசீனா அளவுக்கு அதிகமாக மது அருந்தி இருந்தது தெரிய வந்தது.

    இதன் மூலம் யாராவது மர்மநபர்கள் ஹசீனாவை களியக்காவிளை அழைத்து வந்து அவருக்கு அளவுக்கு அதிகமாக மது கொடுத்து கொன்றிருக்கலாம் அல்லது அவரை கொலை செய்ய திட்டமிட்டு கூடுதலாக போதை கலந்த மதுவை கொடுத்திருக்கலாம் என்று போலீசார் கருதினர்.

    இதற்காக ஹசீனாவின் செல்போனை கைப்பற்றி அதில் இருந்த எண்கள் மூலம் விசாரணையை தொடர முடிவு செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை போலீசார் மேற்கொண்டபோது ஹசீனாவின் செல்போனுக்கு ஏராளமான அழைப்புகள் வந்த வண்ணம் இருந்தது. அவர், இறந்தது தெரியாமல் பலரும் அவரை தொடர்பு கொண்டனர்.

    அப்போது அந்த எண்களை குறித்து கொண்ட போலீசார் ஹசீனாவை தொடர்பு கொண்ட நபர்கள் யார்? யார்? என்பதை ரகசியமாக விசாரிக்க தொடங்கினர். இதில், சில முக்கிய பிரமுகர்களின் விலாசங்களும் சிக்கின.

    இந்த தகவல் கசிய தொடங்கியதை அடுத்து ஹசீனாவின் செல்போனை தொடர்பு கொண்ட நபர்கள் இப்போது கலக்கம் அடைந்துள்ளனர். எந்த நேரத்திலும் போலீசார் தங்களை தேடி வரலாம் என்று எண்ணிய அவர்கள், தலைமறைவாகி வருகிறார்கள்.

    இது போலீசாருக்கு பெரும் சவாலை ஏற்படுத்தி உள்ளது. ஹசீனாவின் சாவுக்கான காரணத்தை கண்டுபிடிப்பதோடு அவரை தொடர்பு கொண்ட நபர்களையும் பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர்.

    ReplyDelete
  2. தனது மனைவியின் கள்ளத் தொடா்பை வீதியில் போவோா் வருவோருக்கு தெரிவித்துக் கத்தியுள்ளாா் குடிகாரக் கணவா்.



    இன்று காலை பத்து மணியளவில் இச் சம்பவம் ஆனைக்கோட்டை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

    இதனையடுத்து மனைவி தெருவில் நின்று கத்திய கணவனைத் தனது சகோதரியுடன் சோ்ந்து வீட்டின் உள்ளே இழுத்துச் சென்று தாக்கியுள்ளாா்.

    அத்துடன் வேடிக்கை பாா்க்கவந்தவா்களையும் கடுமையான முறையில் ஏசித் துரத்தியதாகத் தெரியவருகின்றது.

    மனைவி அரச உத்தியோகத்தா் எனவும் தனது பாவனைக்கு என மோட்டாா் சைக்கிள் ஒன்றை வைத்திருந்ததாகவும் தெரியவருகின்றது.

    இந்த மோட்டாா் சைக்கிளை குடிகாரக் கணவா் எடுத்துச் சென்று ஒரு தடவை விபத்துக்குள்ளாக்கி பொலிஸ் நிலையம் வரை சென்று பெருமளவு பணம் செலவு செய்து மோட்டாா் சைக்கிளைப் பெற்ற மனைவி அதன் பின்னா் கணவரை மோட்டாா் சைக்கிளைத் தொடவிடுவதில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ஆனால் மனைவியின் அயல் வீட்டில் உள்ள பாடசாலை மாணவன் குறித்த மோட்டாா் சைக்கிளை வாங்கி பல தடவைகள் பழகியதாகவும் அதன் பின்னா் தற்போது அந்த மாணவன் துார இடங்களுக்கு செல்வதாயின் அந்த மோட்டாா் சைக்கிளை வாங்கிச் செல்வதாகவும் தெரியவருகின்றது, இதனால் கோபமடைந்த கணவா் இன்று இவ்வாறான நடவடிக்கையில் இறங்கியுள்ளாா்.

    ReplyDelete
  3. எந்த ஒரு ஆணும் சரி, பெண்ணும் சரி தனது அந்தரங்கங்களை அத்தனை எளிதாக வெளியே சொல்வதில்லை. விளையாட்டாகப் பேசித் திரிதல் வேறு வகை சார்ந்ததாகும். தனது ரகசியங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றுதான் எவரும் விரும்புவார்கள். தன்னால் வெளிப்படையாக உலகில் நடத்த முடியாதவற்றை கனவுகள் மூலம் தீர்த்துக் கொள்ளும் நிலைக்கு பலர் தங்களை தள்ளிக் கொள்வது நடந்து வரும் செயலாகும். சமுதாய கட்டமைப்பில் இருந்து கொண்டு பாலியல் சிந்தனைக்கு உட்பட்டு இருக்கும் பலர் காமத்திற்கு அடிமைப்படுதலோடு தங்களது வாழ்க்கையையும் தொலைத்து விடுகிறார்கள். இப்படிப்பட்ட காமம் அவசியமா என்பதை சிந்திக்கும் திறன் கூட இருப்பதில்லை.

    எவருக்கும் தெரியாமல் தப்பு செய்வதில் இருக்கும் ஈடுபாடு மன நிலை நோயாளியாக ஒருவரை மாற்றி விடுகிறது. விளையாட்டாக ஆரம்பிக்கும் செயல்கள் பல விபரீதமான நிலைக்கு கொண்டு சென்று விடுகிறது. இதில் காமத்தின் செயல்பாடு மிகவும் கொடுமையானது. பெண்களை போகப் பொருளாகவே பார்க்கும் சமுதாயத்தில் இருக்கும் ஆணின் கண்கள் போலவே, ஆண்களை போகப் பொருளாகப் பார்க்கும் பெண்கள் என சமுதாயத்தில் அதிகம் இருப்பதில்லை. இத்தகைய வேறுபாடுகள் இடத்திற்கு இடம் மாறுபாடு அடையும். பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தேன் என்பது ஒரு ஆணுக்கு பெருமை தரக் கூடிய விசயமாகவும், பல ஆண்களுடன் தொடர்பு வைத்திருக்கும் பெண்ணை விபச்சாரி எனும் பட்டத்துடனும் பார்க்கும் இந்த சமுதாயத்தின் புத்தி மிக மிக கோணலானது.

    தாய், சகோதரி என வேறுபாடு படுத்தி பார்க்கும் அளவுக்கு சிந்தனை பெருகிப் போன கட்டத்தில் தங்களுக்கு சம்பந்தம் இல்லாத பெண்களைப் பார்க்கும் போது மட்டும் ஏன் இந்த காம உணர்வு ஒரு கட்டுப்பாட்டில் இருப்பது இல்லை. இதற்கு வயதில் ஏற்படும் கோளாறு என்றோ, இயற்கையான விஷயம் இது என்றோ எவரும் காரணம் கற்பித்துக் கொள்ள இயலாது. சிந்திக்கும் பக்குவம் தொலைந்து போனது என்றுதான் பொருள் கொள்ள வேண்டும்.

    பிறன் மனை கள்வர்கள் என ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் எச்சரிக்கை செய்துதான் வைக்கப்பட்டு இருக்கிறது. ஒரு ஆண் தான் பார்க்கும் எல்லா பெண்களையும், ஒரு பெண் தான் பார்க்கும் எல்லா ஆண்களையும் காதல் செய்ய, திருமணம் முடித்துக் கொள்ள நினைப்பது சுரப்பிகளினால் ஏற்படும் மாற்றம் என்று எவரும் சொல்லித் திரிய இயலாது. சுரப்பிகள், நரம்புகள் செயல்பாட்டினை மீறி எண்ணங்கள் ஒன்று அனைவரிடமும் இருந்து கொண்டு இருப்பதை எவரும் மறுக்க இயலாது.

    பயத்துடனே எவரும் தப்பினை செய்ய ஆரம்பிக்கிறார்கள். அந்த தப்பானது தண்டிக்கப்படாமல் போகும்போது மேலும் மேலும் அந்த தப்பை தெரிந்தே செய்கிறார்கள். ஒரு பெண் தனது கணவனுடன் வாழ்ந்து கொண்டே மற்றொரு மணமான ஆணுடன் தவறான உறவு வைத்திருந்தது கண்டுபிடிக்கப் பட்டபோது ஆண் மட்டுமே தண்டிக்கப்பட்டார். அந்த பெண்ணுக்கு வெறும் வசவு பேச்சுகளோடு நின்று போனது. ஏனெனில் ஆண் மட்டுமே தவறு செய்பவனாக பார்க்கப்படுகிறான். இதில் பெண்களுக்கு என விதிவிலக்குகள் இருக்கத்தான் செய்கிறது. இது போன்ற பெண்களை கிராமத்து வழக்கத்தில் சொல்லப்படும் வார்த்தைகளை தள்ளி வைக்கிறேன். இப்படிப்பட்ட மறைமுகமான தவறான நடைமுறைக்கு என்ன காரணம் எனில் சமுதாய கட்டமைப்புகள் மட்டுமல்ல, தனது காமத்தை கட்டுபாட்டில் வைத்துக் கொள்ள தெரியாதவர்கள் தான். மேலும் வாய்ப்பு கிடைக்காதவரை அனைவரும் யோக்கியர்கள் என சொல்லக் கேள்விப்பட்டிருப்பதையும் காணும்போதே, மானம் பெரியதென பலர் வாழ்ந்து கொண்டிருப்பதையும் காணலாம். ஒருவனுக்கு ஒருத்தி எனும் கட்டுப்பாடுடன் வாழும் பல கோடி மக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

    ReplyDelete
  4. காமத்தை முன்னிறுத்தி எவரும் காதல் புரிவதில்லை. காதல் வசப்படும் போது காமம் தொலைப்படும். குடும்ப வாழ்க்கைக்கு முன்னர் ஏனோ தானோவென திரியும் பலரும் குடும்ப அமைப்பில் உட்படும் போது எப்படி ஒரு கட்டுக் கோப்புடன் வாழச் சாத்தியப்படுகிறார்கள்? சமுதாய அமைப்பில் தங்களுக்கென ஒரு நிலையை ஏற்படுத்தி கொள்ளும்போது ஒரு அச்சம் வந்து சேரும். ஆனால் அதையும் மீறி தனது நிலை தெரிந்தே தப்பினை செய்யத் தூண்டுவது கட்டுப்பாடில்லாத காமம்.

    இந்த காமத்தை அறவே துரத்துவது பிரம்மச்சரியம். ஆனால் பிரம்மச்சரியம் என்பது அத்தனை எளிதான விஷயம் அல்ல. என்னைப் பாதித்த ஒரு கதை உண்டு. உயர் வகுப்பை சேர்ந்த ஒருவரின் மனைவி கடும் நோயால் பாதிக்கப்பட்டு இருக்கவே தினமும் அவர் தனது மனைவிக்கு பணிவிடைகள் செய்து வருவதையே பெரும் பேறாக கருதி வருகிறார். ஊரில் இருப்பவர்கள் தருவதை மட்டும் பெற்றுக் கொண்டு வாழ்க்கையை நகர்த்துகிறார். இவ்வாறு இருக்கும்போது ஒரு பணியாக அவர் ஒருமுறை தனியாய் காட்டின் வழியில் நடந்து செல்லும் போது எதிர்ப்பாதையில் தாழ்ந்த வகுப்பினை சார்ந்த பெண் ஒருவர் வருவதை காண்கிறார். அப்பொழுது அவரின் மனம் அல்லாடுகிறது. சல்லாபத்தில் தள்ளாடுகிறது. இப்பொழுது தான் பல வருடங்களாக கட்டிக்காத்த பிரமச்சர்யம் பற்றி, மனிதரில் ஏற்றத் தாழ்வு பற்றி அவருக்கு எந்த சிந்தனையும் எழவில்லை. சுற்றும் முற்றும் பார்க்கிறார். எவரும் கண்ணுக்குத் தென்படவில்லை என்பதை உறுதி செய்ததும் அந்த பெண் அருகில் வந்ததும் அந்த பெண்ணின் கையைப் பிடிக்கிறார். பிரம்மச்சர்யம் தொலைந்து போகிறது.

    இப்படித்தான் பலர் தாங்கள் வாழும் வாழ்க்கை முறை, சமுதாயத்தில் இருக்கும் நன்மதிப்பு என பல விசயங்களை இந்த கட்டுப்பாடில்லாத காமத்திற்கு பலியாக்கி விடுகின்றனர். இது இயற்கையான விசயமா? அல்லது கட்டுப்பாடில்லாத மனதினால் ஏற்படும் அசிங்கமா?

    ReplyDelete
  5. தேவதாசிப் பொருள் விளக்கம்:
    தேவதாசி- தேவடியாள்; தேவ + அடியாள் = தேவடியாள். தேவதாசி, தேவடியாள், கலைப்பெண்டு,விலைமகள், பரத்தை முதலிய பெயர்கள் இவர்களுக்கு உண்டு. “தேவதாசி என்ற சொல்லுக்குத் தெய்வத்துக்கு அடிமை பூண்டவள் என்பது பொருள். தாசி என்பது வட சொல். இதற்கு அடியவர் என்பது தமிழில் பொருள். தமிழில் குறிப்பிடப் பெறும் ‘தேவரடியார்’ என்ற சொல் ‘தேவதாசி’ என்ற வடமொழி சொல்லுக்கு ஒப்பாகும். தேவரடியார் என்பது தேவருக்கு அதாவது இறைவனுக்கு அடியவராக இருந்து பணி செய்பவரைக் குறிக்கும்”.1 என்று தேவதாசி முறைக்கு விளக்கமளிக்கிறார் முருகேசன். மேலும் பொட்டுக் கட்டுதல் என்பதைப் பற்றி, “பொட்டுக் கட்டுவது என்பது ஒரு பெண் தேவதாசியாக மாற்றப்படுவதன் அடையாளச் சடங்காகும். பொட்டு என்பது திரு மாங்கல்யத்திற்கு இணையானதாகும். ஒரு பெண் தேவதாசி ஒருத்திக்குப் பிறந்து விட்டால் மட்டுமே அந்தத் தேவதாசி உரிமையை அவள் பெற்றுவிட முடியாது. முறைப்படி பொட்டுக்கட்டு மூலம் அவளைக் கடவுளுக்கு அர்ப்பணிப்பதன் மூலமே அவள் தேவதாசி ஆகமுடியும்.”

    ReplyDelete
  6. தேவதாசிக் குலத்தில் ஆண் அடிமை:

    தேவதாசிக் குலத்தில் ஆண் பிறந்தால் அந்த ஆண் தாசிகளுக்கு அடிமையாகத்தான் இருக்க வேண்டும். அவர்கள் சுட்டும் பணிகளைச் செய்து முடிக்க வேண்டும் என்ற கடமை அவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்தது. தாசி வீட்டில் ஆண் பிள்ளையாய்ப் பிறக்கும் கொடுமைகளையும் தனக்கு வேறு தொழில் செய்யத் தெரியாத நிர்க்கதியையும் ஆண்களுக்குச் சொத்துரிமை இல்லா கொடுமைகளையும், அவர்கள் இஷ்டப்படி நடக்காவிட்டால் சோறு போடாது வெளியில் விரட்டும் கொடுமைகளையும் நினைத்தான். மற்றசாதியில் பெண்ணாய்ப் பிறப்பதைவிட மண்ணாய்ப் பிறக்கலாமென்று சொல்வது போல், இந்தச் சாதியில் ஆண் மகனாய்ப் பிறப்பதை விட மண்ணாய்ப் பிறக்கலாமென்பதை உலகமறியவில்லை போலும் என்று நினைத்துருகி நின்றான்”. ஆண்கள் இந்தச் சாதியில் சுயமாகச் சிந்திக்கும் திறன் இல்லாமல் முடக்கப்பட்டும் அவர்களின் எண்ணப்படி வாழ வழியில்லாமலும் இருக்கின்றனர். ஆனாலும் இவ்வினத்தில் ஆணுக்குப் பெண்குழந்தை பிறந்தால் தேவதாசித் தொழிலுக்கு அனுமதிப்பதில்லை.

    ReplyDelete
  7. தேவதாசி என்பவர்கள் பெரும் கோயில்களில் திருப்பணிக்காகவும் சேவைக்காகவும் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு சிறுவயதில் நேர்ந்து விடப்படும் பெண்களைக் குறிக்கும் சொல் . இச்சொல் தேவன் (இறைவன்) + தாசி (அடிமை) = இறைவனின் அடிமை என்ற பொருள்படும்.

    இவ்வழக்கம் 1930களுக்கு முன்பு வழமையாக இருந்தது. இந்த முறை கோயில் பணிகளுக்காக ஏற்படுத்தப்பட்டதாக இருந்தாலும், பின்னாட்களில் இவர்கள் கோயில்களை நிர்வாகித்த மேல் வர்க்கத்தினருக்கு அல்லது அரசர், செல்வந்தர் போன்றவர்கள் முன்பு நடனமாட வைக்கப்பட்டதுடன் அவர்களுடைய பாலியல் இச்சைகளுக்கு அடிமைகளாகவும் பயன்படுத்தப்பட்டனர். இதன் காரணமாக இவ்வழக்கத்துக்கு 1920 முதல் இந்தியாவில் பாரிய எதிர்ப்பு இருந்தது, அதன் காரணமாக 1947 ஆண்டில் தேவதாசி ஒழிப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டது.

    ஒழுக்கம், கற்பு என்னும் கருத்துக்களில் ஆணுக்கொரு நீதி பெண்ணுக்கொரு நீதி என்ற ஒரு தலைப்பட்ட நீதி வழக்கிலிருப்பதை வெளிப்படையாகக் காட்டும் நிறுவனமே தேவதாசி முறையாகும். இது ஆண்களின் வசதிக்காகவும், அவர்களின் இச்சையை அவர்கள் விருப்பப்படி பூர்த்தி செய்யவும், பெண்கள் சமூகத்தை மூளைச்சலவை செய்து ஏற்படுத்தப்பட்ட ஒரு கொடிய திட்டமாகும். பொட்டுக் கட்டுதல் என்ற பெயரில் பெண்களின் பலகீணமான பொருளாதார நிலையைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்ட அநீதியாகும்.

    இம்முறையின்படி சமூகத்தில் சில பெண்கள் கடவுளுக்குச் சேவை செய்வதற்காக தானம் செய்யப்பட்டனர். அவர்கள் தம் வாழ்க்கையில் விலை மகளிராகத் தொழில் புரிந்தனர். மதத்தின் பெயரால் அப்பெண்கள் பலியாடாக ஆக்கப்பட்டனர். ஆடல் பாடலுக் கென்றும், பூசைகள் செய்ய ஒத்தாசைக்கென்றும், கடவுளுக்குச் சேவை செய்ய என்றும் அப்பெண்கள் கோவில்களுக்குத் தானம் செய்யப் பட்டனர். குடும்பத்தில் இடர்பாடு வரும்போது அது நீங்குவதற்காகவும், குழந்தை பிறக்காத குடும்பத்தில் குழந்தை பிறந்தால் நேர்திக் கடன் என்றும், ஆண் வாரிசுகள் இல்லாத குடும்பங்களில் வருமானத்திற்காகவும், பிற பொருளாதார சிக்கல்களுக்காகவும் பெண்கள் அவ்வூர் கோவில் தெய்வங்கள் பெயரில் காணிக்கையாகக் கொடுக்கப்பட்டனர். இன்னும் சில குடும்பங் களில் முதல் குழந்தை பெண் என்றால் அது கோவிலுக்கே என்று, உயில்கள் முலமாக சாசனம் செய்திருந்தனர். அக்கோவிலின் கடவுளை மணந்து கொண்டு, பூசைக்காலங்கள், திருவிழாக்கள் முதலிய சமயங்களில் இறைவனை ஆடல் பாடல்களால் மகிழ்வித்து வாழ்க்கை நடத்தினர். நடை முறையில் அவர்கள் அக்கோவில் பூசாரிகள், அவ்வூர் தனவந்தர்கள், மற்றும் பலருக்கும் இன்பமளிக்கும் விலைமாதர்களாவே வாழ்க்கையை நடத்தினர். பெண்ணைப் பெற்றவர்களோ மறைமுகமாக அச்செல்வந்தர்களிடம் இருந்து பொன், பொருள் நிலபுலன்களைப் பெற்றுக் கொண்டனர்.

    அதனால் தேவதாசிகள் கடவுளைக் கணவனாக வாய்க்கப் பெற்றவர்களாதலால் அவர்கள் வாழ்வில் ஒருபோதும் கைம்மை நிலையை அடைய மாட்டார்கள். அதனால் இப்பெண்கள் ஒரு சில இடங்களில் உயர்வாகவும், கற்புநெறி தவறியதற்காக இப்பெண்டிர் சில இடங்களில் இழிவாகவும் கருதப்பட்டனர். இவ்வாறு அவர்கள் வாழ்க்கை சில முரண்பட்ட கூறுகளை கொண்டு விளங்கியது. தேவாரடியாள் என்ற வார்த்தை மூலம் தெய்வத்திற்கு அடிமையானவள் என்று கருதப்பட்டவள், பின்னாளில் தேவடியாள் என்று அவர்கள் இழிநிலையைக் குறிப்பதற்காகவும் அந்த வார்த்தை மாறியது.


    டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்கள் இம்முறையின் கேடுகளை மக்களிடையே எடுத்துக்கூறி விழிப்புணர்சியை ஊட்டினார். பின்னர் அவர் 1929ல் சென்னை மாகாண சட்டசபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும், சென்னை மாகாணத்தில் இவ்வழக்கத்தை ஒழித்துச் சட்டம் கொண்டு வர உறுதுணையாயிருந்தார். இவர்கள் தேவரடியாள் என்ற சொல்லாலும் குறிப்பிடப்பட்டார்கள். தேவர்(கடவுள்) + அடியாள் என்று வழங்கப்பட்ட சொல் பின்நாட்களில் தேவுடியா என்ற கொச்சைச் சொல்லாக மாற்றம் பெற்றது என்பதும் இங்கு கவனத்துக்குரியது.

    ReplyDelete
  8. 'கூடிப் பிரிவது' காதல்;
    'பிரியக் கூடியது' காதல்...

    ReplyDelete