மரணம் பற்றி நீ கண்டுபிடித்ததெவை?

Share On Facebook ! Share On Goole Plus ! Tweet This !


மக்களால் ஒவ்வொன்றின் பாகங்கள், தனித்தன்மைகள், தொடர்புகள், தாக்கங்கள், திரிபுகள், பயன்கள், மற்றும் மாற்றுகளைப் புலப்படுத்த முடியும். வேறெதைப் புலப்படுத்த முடியும்? ~Disclosables

  1. சாதாரணமாக ஆயிரக்கணக்கான தலைமுறைகளுக்கு ஒரு முறைதான் திடீர் மாற்றம் நிகழ வாய்ப்பு இருக்கிறது. இனப்பெருக்கத்தின்போது பெற்றோர் இருவரிடமும் விந்தும் சினை முட்டையும் உருவாகும்போது, அவர்களது மரபணுக்களில் உள்ள குரோமோசோம்கள் (அதில்தான் டி.என்.ஏ. இருக்கிறது) பிரிக்கப்பட்டும் உடைக்கப்பட்டு ம் அவற்றில் சேர்க்கப்படுகின்றன. பிறகு அந்த விந்தும், சினைமுட்டையும் கூடும்போது சில மரபணுக்கள் அப்பாவிடம் இருந்தும், சில மரபணுக்கள் அம்மாவிடம் இருந்தும் தான்தோன்றித்தனமாகச் சேர்கின்றன. இதன் காரணமாக வாரிசுக்கு வித்தியாசமான இணைமரபணுக்கள் (alleles) தோன்றியிருக்கும்.

    இப்படி இணைமரபணுக்கள் உருவாகும்போது திடீர் மாற்றங்கள் நீண்ட காலத்துக்கு நிகழ்ந்து, அது தொடர்ந்துகொண்டே இருந்தால், அதன்மூலம் புதிய உயிரின வகை தோன்றும். கோடிக்கணக்கான ஆண்டுகளில் நிகழ்ந்த திடீர் மாற்றங்கள், இயற்கைத் தேர்வு ஆகிய இரண்டு நடைமுறைகளும், பூமியில் இன்றைக்கு நாம் பார்த்துக் கொண்டிருக்கும் உயிரினங்கள் அனைத்தையும் உருவாக்கியுள்ளன. மிகவும் சிறிய நுண்ணுயிரியான பாக்டீரியா முதல் மனிதர்கள்வரை, நம்மைச் சுற்றியுள்ள அனைத்தும் இதில் அடக்கம்.

    ஏன் இந்த மாற்றம்?

    மரபணுக்களில் திடீர் மாற்றம் நிகழ்வதற்கான காரணம் என்ன? ஓர் உயிரினம் வாழும் சுற்றுச்சூழலில் உணவு, வாழிடம், இயற்கை நிகழ்வுகள் போன்ற பல்வேறு நெருக்கடிகள் (Environmental Pressures) இதில் தாக்கம் செலுத்துகின்றன. இந்த புற நெருக்கடிகளால்தான் திடீர் மாற்றம் தூண்டிவிடப்படுகிறது. அதுவே மரபணு மாற்றத்துக்கு வித்திட்டு, பிறகு இயற்கைத் தேர்வுக்கு இட்டுச் சென்று தனி உயிரின வகைகளையும் (Species) துணை உயிரின வகைகளையும் (Sub Species) உருவாக்குகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக, காக்கை குடும்பத்தைச் சேர்ந்த காட்டில் வாழும் அண்டங்காக்கையையும், நகரத்தில் நாம் பார்க்கும் சாதாரண காக்கையையும் குறிப்பிடலாம்.

    எல்லாம் சரி, உலகில் முதல் உயிர் தோன்றியது எப்படி?

    பரிணாமவியல் கொள்கையின்படி, கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன், வேதிப்பொருட்கள் தான்தோன்றித்தனமாகச் சேர்ந்ததால், தன்னையே பிரதிசெய்துகொள்ளும் மூலக்கூறுகள் முதலில் உருவாகின. அவையே பின்னர் நுண்ணுயிரிகளாக உருமாறின. உயிரின் இந்தச் சிறு பொறிதான், இன்றைக்கு நாம் பார்த்துக்கொண்டிருக்கும் அனைத்து உயிரினங்களுக்குமான விதை.

    ReplyDelete
  2. கன்னம் சுருங்கிட நீயும்
    மீசை நரைத்திட நானும்
    வாழ்வின் கரைகளைக் காணும்
    காலம் அருகினில் தானோ?

    கண் மூடிடும் அவ்வேளையும்
    உன் கண்ணில் இன்பங்கள் காண்பேன்......

    ReplyDelete
  3. நான் மரணிக்கவே விரும்புகிறேன் ;

    இலவங்காயிலிருந்து வெடித்துப் பறக்கும் பஞ்சைப்போல ;

    புகைபோக்கியின் வழியே மெல்லக் கசியும் புகை போல ;

    பழுத்துச் சிவந்து மரத்திலிருந்து விழும் இலை போல ;

    முற்றத்தில் குவிந்து பின் மெல்ல வீழும் துளி போல ;

    எனது மரணமும் நிகழ்ந்திடாதா..?

    தினமும் என் மரணத்தை எதிர் நோக்குகிறேன்,

    என் மரணத்தின் சாவி உங்களிடம் இருந்தால்

    மரணக் கதவைக் கொஞ்சம் திறந்து விடுங்களேன்...

    உங்களில் யாரேனும் கொலை செய்ய விரும்பினால்

    என்னைக் கொன்று விடுங்களேன் ப்ளீஸ் !!!

    எனக்குள் இருக்கும் நானாகிய என்னை.

    --

    ReplyDelete
  4. என் கரங்கள் பாவங்களால் நனைக்க பட்டவை ;

    என் விழிகள் பொய் சுமந்து திரிகிறது ;

    என் இதயம் மாசால் நிரம்பி வழிகிறது ;

    என் நாவோ துரோகத்தில் தவழ்கிறது ;

    என் மூச்சுக்காற்றிலும் விஷ வாடை வீசுகிறது ;

    எனவே நானாகிய என்னை என்னில் புதைத்துக்கொள்கிறேன்,

    இருந்தாலும் மெல்லக்கசிகிறது துர்வாடை..

    ReplyDelete
  5. எனக்கும் எனக்குமிடையே உள்ளது ஒரு

    மெல்லிய கண்ணாடிச் சுவர்..

    ஒருபுறம் பொய் மறுபுறம் உண்மை ;

    நல்லது - கெட்டது ;

    அழகு - அசிங்கம் ;

    பாவம் - புண்ணியம் ;

    சுகம் - துக்கம் ;

    வெளிச்சம் - இருட்டு ;

    ஜனனம் - மரணம் ;

    சுவர் மெல்ல விரிசல் விடுகிறது -

    இன்றோ நாளையோ உடைந்து விடலாம்,

    யாவும் இரண்டறக் கலந்து விடலாம் ;

    எனக்குள் இருக்கும் எனக்கு விடுதலை -

    மரணம் !

    ReplyDelete
  6. மரணம் எப்படி இருக்கவேண்டும் ?

    மரணம் ஒருவகை அமைதி.
    மரணம் உலகிற்கு புதிதல்ல!
    ஆனால் அவரவர்க்கு வரும்போது
    தான் மரணம் புதிதாக உள்ளது!
    மரணம் பற்றிய பேச்சு தவறல்ல!
    வாழ்வின் யதார்த்தம் தான் மரணம்!

    மரணம் என்பது கால நிகழ்வு. உடல் என்கிற சட்டையை விட்டு ஆத்துமா (ஜீவன்) வெளியேரும் ஒரு உன்னத நிகழ்ச்சி. இது ஆத்துமா அல்லது உடலுக்கு வலி இல்லாத நிகழ்வாக இருக்க வேண்டும். எப்படி மரத்தில் இருந்து காய்ந்த இலை விழுகிறதோ அது போல இருக்கவேண்டும். காய்ந்த இலை விழும்போது மரமும் வலி அறியாது, இலையும் வலி அறியாது.... மெல்ல,மெல்ல மெதுவாய் காற்றிலே அசைந்தாடி .........மரண காயம் இல்லாமல்...!!!! மனித மரணம் மதிப்புடையதாக இருக்க வேண்டும்.

    மனிதராய் பிற்ந்த அனைவருக்கும் மரணம் என்பது நிச்சயக்கப்பட்ட ஓன்று, அந்த மரணம் எப்படி இருக்கவேண்டும்

    1) குடும்பத்திற்க்கு ஆற்ற வேண்டிய கடமைகளை நிறைவேற்றிய பின் வரும் மரணம் .

    2) வாங்கிய ஓய்வுதியத்தை மருத்துவமனைகளுக்கு செலவிடாமல் வரும் மரணம்

    3) நோய்வாய்பட்டு உடல் வருந்தி, கவனிக்க ஆள் அரவம் இன்றி இல்லாமல் வரும் மரணம்

    4) விபத்துக்கள், கொலைகள், தற்க்கொலை, போன்றவற்றின் மூலம் இல்லாமல் வரும் மரணம்

    5) இயற்க்கையாய் தூக்கத்தில் வலி அறியாது வரும் மரணம்

    6) நோய், நொடி இன்றி வரும் மரணம்

    7) பழி பாவம் இன்றி வரும் மரணம்

    8) எழுபது வயதுக்கு மேல் 75 வயதுக்குள் நிகழும் இயற்கை மரணம்.

    9) தான, தர்மத்திற்க்கு பின் வரும் மரணம்

    10) இவர் போல யார் என்று ஊர் சொல்லும் மரணம்.

    11) வாழ்வது ஒரு முறை ஊருக்காக, உலகத்திற்க்காக, மனித நேயமுடன், பண்புடன், அன்புடன், பிறர் பின் பற்றும் வாழ்க்கை வழி முறையுடன் வாழ்ந்த பின் வரும் மரணம்

    மனித மரணம் மதிப்புடையதாக இருக்க வேண்டும்.

    ReplyDelete
  7. அகம் அது சந்திக்காமல்
    விழிகள் அது சந்தித்தால்
    விளைவுகள் வீபரீதமானது
    மரித்து விட்டது என் காதல்!

    இயந்திரமாய் பயணிக்கும் வாழ்வில்
    வழிப்போக்கனாய் வந்திருகிறது
    வலி கொடுத்த அந்த காதல்!

    விழியின் இறுதித்துளி கண்ணீரில்
    வீழ்ந்து கிடக்கும் காதல் சுகத்தால்
    நடை பிணமாய் வாழ்வு என்று
    பொருத்தம் காணும் எதிர்காலம்!

    சுகமாய் வந்த காதல்
    சோகமாய் சென்று விட
    நினைவுகள் உயிர் இழந்து
    இதயம் அது துடித்தே இறக்கும்!

    காதலுக்கு அழகு கூட்டி
    பொய் கண்ட என் கவிதைகள்
    மெய் சொல்ல மறந்தனவே!
    காதல் பொய் என்று!

    இனியொரு காதல்
    இதயம் அது காணாது!
    மரித்து போன காதல் உயிர்த்தெழ
    காதல் ஒன்றும் இயேசு அல்ல!

    அகால மரணம் கண்டது
    என் காதல்!

    ReplyDelete
  8. இந்த வாழ்க்கைக்கு
    நானும் தகுதியானவன்தான்
    என எல்லோராலும்
    உணரப்பட்டபோது
    நான்
    புதைக்கப்பட்டிருந்தேன்.

    ReplyDelete