திருக்குறள் பற்றி நீ கண்டுபிடித்ததெவை?

Share On Facebook ! Share On Goole Plus ! Tweet This !


மக்களால் ஒவ்வொன்றின் பாகங்கள், தனித்தன்மைகள், தொடர்புகள், தாக்கங்கள், திரிபுகள், பயன்கள், மற்றும் மாற்றுகளைப் புலப்படுத்த முடியும். வேறெதைப் புலப்படுத்த முடியும்? ~Disclosables

  1. எவனுக்கும் பாகங்கள், தனித்தன்மைகள், தொடர்புகள், தாக்கங்கள், திரிச்சல்கள், பயன்கள், மற்றும் மாற்றுக்களிருக்கும்!

    எவளுக்கும் பாகங்கள், தனித்தன்மைகள், தொடர்புகள், தாக்கங்கள், திரிச்சல்கள், பயன்கள், மற்றும் மாற்றுக்களிருக்கும்!

    எவ்வொன்றிற்கும் பாகங்கள், தனித்தன்மைகள், தொடர்புகள், தாக்கங்கள், திரிச்சல்கள், பயன்கள், மற்றும் மாற்றுக்களிருக்கும்!

    இருப்பதைத் தான் கண்டுபிடித்து எடுத்துக்காட்ட முடியும்!!

    ReplyDelete
  2. "இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை
    மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்
    மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்"

    ReplyDelete
  3. திருக்குறளில் ஐம்பதுக்கும் குறைவான வடசொற்களே உள்ளன.

    திருக்குறளில் ‘தமிழ்‘ என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை.

    திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு-1812

    திருக்குறளின் முதல் பெயர்- முப்பால்

    திருக்குறளில் உள்ள அதிகாரங்கள்- 133

    திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-380

    திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள்-700

    திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-250

    திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள்-1330

    திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது.

    ஒவ்வொரு குறளும் இரண்டு அடிகளால், ஏழு சீர் களை கொண்டது.

    திருக்குறளில் உள்ள சொற்கள்-14,000

    திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள்- 42,194

    திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247-இல், 37 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை

    திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள்-அனிச்சம், குவளை

    திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம்- நெருஞ்சிப்பழம்

    திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை- குன்றிமணி

    திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து-ஒள

    திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம்- குறிப்பறிதல்

    திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள்- பனை, மூங்கில்

    திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரெஎழுத்து-னி

    திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள்-ளீ,ங

    திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள்- தமிழ், கடவுள் ( அகர முதல என
    தொடங்கும் முதல் குறள் கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் உள்ளது, இதில் ஆதி பகவன் - என்பது கடவுளை குறிக்கிறது)

    திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர்- தஞ்சை ஞானப்பிரகாசர்

    திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர்-மணக்குடவர்

    திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்- ஜி.யு,போப்

    திருக்குறளை உரையாசிரியர்களுள் 10-வது உரையாசிரியர்-பரிமேலழகர்

    திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண்- ஒன்பது.

    திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது.

    எழுபது கோடி என்ற சொல் ஒரே ஒரு குறளில் இடம்பெற்றுள்ளது.

    ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.

    திருக்குறள் இதுவரை 80 மொழிகளில் வெளிவந்துள்ளது.

    திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழிபெயர்த்துள்ளனர்

    திருக்குறள் நரிக்குறவர் பேசும் வக்போலி மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

    ReplyDelete


  4. உலக மொழிகளில் திருக்குறள்

    ஐரோப்பிய மக்களுக்கு 173௦ல் திருக்குறளை அறிமுகப்படுத்தியவர் தந்தை பேஸ்ச்சி ஆவார்.

    மொழிபெயர்ப்புகள்

    உலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல்களில் மூன்றாம் இடத்தைத் திருக்குறள் வகிக்கிறது . இதுவரை 80 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

    இந்திய மொழிகள்
    குஜராத்தி, இந்தி, கன்னடம், கொங்கணி மொழி, மலையாளம், மராத்தி, ஒரியா, பஞ்சாபி, இராஜஸ்தானி, சமற்கிருதம், சௌராட்டிர மொழி, தெலுங்கு போன்ற 13 மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது

    ஆசிய மொழிகள்
    அரபி, பருமிய மொழி, சீனம், பிஜியன், இந்தோனேசிய மொழி, யப்பானியம், கொரிய மொழி, மலாய், சிங்களம், உருது போன்ற 10 மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

    ஐரோப்பிய மொழிகள்
    செக், டச்சு, ஆங்கிலம், பின்னிய மொழி, பிரெஞ்சு மொழி, செருமன், அங்கேரிய மொழி, இத்தாலிய மொழி, இலத்தீன், நார்வே மொழி, போலிய மொழி, ரஷிய மொழி, எசுப்பானியம், சுவீடிய மொழி ஆகிய 14 ஐரோப்பிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

    ReplyDelete