மகரம் லக்னம் பற்றி நீ கண்டுபிடித்ததெவை?

Share On Facebook ! Share On Goole Plus ! Tweet This !


மக்களால் ஒவ்வொன்றின் பாகங்கள், தனித்தன்மைகள், தொடர்புகள், தாக்கங்கள், திரிபுகள், பயன்கள், மற்றும் மாற்றுகளைப் புலப்படுத்த முடியும். வேறெதைப் புலப்படுத்த முடியும்? ~Disclosables

  1. அறைந்திட்டேன் இன்னமொன்று அன்பாய்க்கேளு
    அப்பனே மகரத்தில் உதித்தசேய்க்கு
    திரந்திட்டேன் திரவியமும் மனையும் சேதம்
    தேசமா ளரசனுட பகையுண்டாகும்.
    குறைந்திட்டேன் கொடுஞ்சேயும் கோணமேற
    கோவேறு கழுதைகளும் காவல் மெத்த
    பரந்திட்டேன் போகருட கடாக்ஷத்தாலே
    பதியறிந்து புவியோர்க்குப் பாடினேனே


    இன்னுமொன்றையும் சொல்வேன்; நன்கு ஆராய்ந்து கேட்டுத் தெரிந்து கொள்வாயாக! மகர லக்கினத்தில் பிறந்த சாதகனுக்கு திரவிய நாசமும் மனை நாசமும் தேசத்தை ஆளும் மன்னரின் பகையுமுண்டாகும். ஆனால் சனி, சேய் [செவ்வாய்] ஆகிய கிரகங்கள் கோணத்தில் வீற்றிருந்தால் நிறைந்த பதி வாகனப் பிராப்தியும், பாதுகாவல் மிகுதியும் உண்டென்றும் எனது குருவான போகரின் கருணை கொண்டே கூறுகிற புலிப்பாணி ஆகிய என்றன் கருத்தை கிரக நிலவரத்தை ஆய்ந்தறிந்து கூறவேண்டியது நன்மை தரும்.

    இப்பாடலில் மகர இலக்கினத்தில் பிறந்த ஜாதகரரைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.

    ReplyDelete