மனித உடல் அமைப்பு பற்றி நீ கண்டுபிடித்ததெவை?

Share On Facebook ! Share On Goole Plus ! Tweet This !


மக்களால் ஒவ்வொன்றின் பாகங்கள், தனித்தன்மைகள், தொடர்புகள், தாக்கங்கள், திரிபுகள், பயன்கள், மற்றும் மாற்றுகளைப் புலப்படுத்த முடியும். வேறெதைப் புலப்படுத்த முடியும்? ~Disclosables

  1. மனித உடம்பில் நரம்பு மண்டலம் ஓர் அதிசயம். மூளையும், தண்டுவடமும், அவற்றில் இருந்து புறப்படும் பல நரம்புகளும் இதில் அடக்கம்.
    மூளையில் இருந்து 12 ஜோடி நரம்புகள் புறப்படுகின்றன. சுண்டுவிரல் அளவுக்குத் தடிமன் உள்ள தண்டுவடம் மூளையின் அடிப்பாகத்தில் இருந்து தலையின் துவாரம் வழியாகச் செல்லும் வடமாகும். முதுகு எலும்புகள் நடுவில் துவாரம் உள்ளவை, ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டவை. அவற்றின் வழியாக சுமார் 18 அங்குல நீளமுள்ள தண்டுவடம், முதுகின் அடிப்பாகம் வரை நீண்டிருக்கிறது. இதில் இருநëது 31 ஜோடி நரம்புகள் கிளம்புகின்றன.

    காட்சி, கேள்வி, சுவை, மணம் ஆகியவற்றுடன் மூளை நரம்புகள் பிரதானமாகச் சம்பந்தப்பட்டிருக்கின்றன. தண்டுவடம், மூளை, அவற்றின் நரம்புகள் ஆகியவை உணர்ச்சிகளையும், அசைவுகளையும் தீர்மானிக்கின்றன என்று சுருக்கமாகச் சொல்லி விடலாம். மூளையும், தண்டுவடமும் மைய நரம்பு மண்டலமாக (Central nervous system) அமைகின்றன. மூளையில் இருந்து வரும் 12 ஜோடி நரம்புகளும், தண்டுவடத்தில் இருந்து புறப்படும் 31 ஜோடி நரம்புகளும் மேற்பரப்பு (Peripheral nervous system) நரம்பு மண்டலம் ஆகும்.

    மூன்றாவதாகக் குறிப்பிட வேண்டியது, தன்னியக்க நரம்பு மண்டலம் (Autonomic nervous system). இதை மேற்பரப்பு மண்டலத்தின் சிறப்புப் பகுதி எனலாம். மூளையின் கட்டுப்பாடு இன்றித் தாமே நிகழும் சுவாசம், செரிமானம் முதலியவற்றை முறைப்படுத்துவது தன்னியக்க மண்டலம்.

    அதன்மூலம் நிலையான உட்புறச் சூழல், உடலைக் காப்பதற்கு வசதி ஏற்படுகிறது. தன்னியக்க மண்டலம் என்று கூறினாலும் இது மைய நரம்பு மண்டலத்துடன் உறவில்லாமல் தனியாட்சி நடத்தவில்லை. தன்னியக்க மண்டலச் செயல்களைக் கட்டுப்படுத்தும் நரம்பு மையங்கள் மைய நரம்பு மண்டலத்திலேயே உள்ளன.

    தன்னியக்க நரம்பு மண்டலம் இரு பிரிவுகளை உடையது. 1.பிரிவு அமைப்பு 2. துணைப் பிரிவு அமைப்பு. உடலின் செயல் அதிகரிக்கும்போதும், வேகம் கூடும்போதும், நெருக்கடி நிலைகளிலும், உடலின் தேவைகளுக்கு உகந்தவாறும் செயல்படுவது பிரிவு நரம்பு. தசைகளுக்குக் கூடுதலாக ரத்தத்தை அனுப்புவது, குறைவான ஒளி உள்ளபோது கண்களின் பாவைகளை விரிவாக்குவது போன்றவை பிரிவு நரம்பு அமைப்பின் செயல் களில் அடங்கும்.
    பொதுவாக, பிரிவு நரம்புச் செயல்பாடுகளுக்கு எதிராக வினைபுரிவது துணைப் பிரிவு நரம்பு மண்டலம்.

    இதயத் துடிப்பை மெதுவாக்குவதும், ரத்தத்தைத் தசைகளில் இருந்து இரைப்பைக்கும், குடல்களுக்கும் திருப்பி விடுவதும், கண்களின் பாவைகளைச் சுருங்கச் செய்வதும் துணைப் பிரிவு நரம்பு மண்டலச் செயல்களில் அடங்கும். உறங்கும்போது துணைப் பிரிவு மண்டலம் உடலின் செயல் வேகத்தைத் தணிக்கிறது. இரண்டு மண்டலங்களின் செயல்களைச் செம்மையாக ஒத்திசைவு காணச் செய்வது மைய நரம்பு மண்டலம்.

    நரம்பு மண்டலம் இடைவிடாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. உடலின் சகல பாகங்களில் இருந்தும், தண்டுவடத்துக்கும், மூளைக்கும் செய்தி சென்று கொண்டிருக்கிறது. அதைப் போலவே மூளையில் இருந்தும், தண்டுவடத்தில் இருந்தும் செய்திகள் உடலின் பல பாகங்களுக்குப் போய்க் கொண்டே இருக்கின்றன.

    நரம்பு மண்டலம் இருவகை நரம்புகளால் அமைந்தது. ஒருவகையான உணர்வு (sensory) நரம்புகள், செய்தியை மூளைக்கோ, தண்டுவடத்துக்கோ கொண்டு செல்வதால் உட்செல் (afferent) நரம்புகள் எனப்படும். இன்னொரு வகை நரம்புகள் மூளை அல்லது தண்டுவடத்தில் இருந்து உடல் உறுப்புகளுக்கு செய்திகளைக் கொண்டு செல்வதால் அவை வெளிச்செல் நரம்புகள் எனப்படும். அவற்றை செயல் (motor) நரம்புகள் என்றும் கூறுவர்.

    இந்த இருவகை நரம்புகளும் சேர்ந்தாற்போல் அமைந்துள்ளன. இவற்றின் போக்குப் பாதையும், வரத்துப் பாதையும் இரண்டு இருப்புப் பாதைகள் அடுத்தடுத்து இருப்பதைப் போல உள்ளன. இந்த நரம்பு மண்டலங்கள் எல்லாம் இணைந்துதான் நம் உடம்பை இயக்குகின்றன.

    ReplyDelete
  2. உடலும் உயிரும் இசைந்து இணங்கி இயங்கும் நிலையில் இணைக்கப் பெற்று வாழ்ந்து வருபவன் மனிதன்.
    · அற்புதமான தொகுப்பாக உள்ள உடல் அமைப்பு
    · வியத்தகு ஆற்றல்கலை உள்ளடக்கமாக கொண்ட உயிர்ச் சக்தி
    · குறுகியும்,விரிந்தும்,நுணுகியும் இயங்கத் தக்க அறிவுத்திறன்
    இவை இலட்சக்கணக்கான ஆண்டுகளாகக் கரு மூலம் பிறவித் தொடராக மேலும் மேலும் சிறந்து மிகவும் உயர்ந்த நிலையை எய்தியுள்ளன.
    ஓர் உயர்ந்த குறிக்கோளோடு மனித இனம் இவ்வுலகுக்கு வந்துள்ளது.
    · மன உணர்வை விரிந்த அளவில் வளர்த்துக் கொள்வதையும்
    · அறிவியல் முழுமை பெற்று இயற்கையை உணர்ந்து,ரசித்து அதனோடு ஒன்றி நிறைவுபெற்று, நிலையான அமைதியைப் பெருவதையும் உள் நோக்கமாகக் கொண்டதே மனித வாழ்க்கை.
    அறிவியல் உயர்வு பெற்று,உயிரின் மதிப்பையும் சிறப்பையும் உணர்ந்து நிறைவு பெறுவதே மனிதப் பிறவியின் நோக்கமெனினும், அது வெற்றி பெற உடலை நலமோடும் வளமோடும் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
    ஆகவே முதலில் மனித உடலின் அமைப்பையும் அதன் இயக்கங்களையும் குறித்து தெரிந்து கொள்வது நமக்கு மிகவும் நன்மை பயக்கும்.
    மனித உடல் இயங்குவதற்கு உயிர்சக்தி முக்கியமனதாகவும்,மூல காரணமாகவும் இருக்கிறது.உயிர்ச்சக்தி தங்கும் ஒரு பாத்திரம் போல் உடல் அமைப்பு இருக்கிறது.
    மனித உடலை நுணுகி ஆராய்ந்தால்,ஐந்து பூதங்களின் அமைப்புக்கு இசைய ஐந்து அடுக்குகளாக அது இருப்பது தெரியவரும்.

    பிருதிவி,அப்பு,தேயு,வாயு,ஆகாசம் என ஐந்து பூதங்களாலான உடலமைப்பில்,
    பிருதிவி என்னும் மண்,பரு உடலாகவும்
    அப்பு என்னும் நீர்,இரத்தமாகவும்
    தேயு என்னும் நெருப்பு,உடல் சூடாகவும்
    வாயு என்னும் காற்று,மூச்சாகவும்
    ஆகாசம் என்பது உயிர்ச்சக்தியாகவும் இருக்கின்றன.
    நீர்,நெருப்பு,காற்று இந்த மூன்றும் சேர்ந்து பருப்பொருளான உடலையும் நுண்பொருளான உயிர்ச் சக்தியையும் இணைந்து அவை நட்போடு இயங்குமாறு செய்கின்றன.
    இந்த மூன்று பொருட்களின் இயல்பான் அளவும் தரமும் குறையுமாயின் அவற்றின் சுற்றியக்கத்துத் தடை னேருமாயின் ,உடலில் உயிர்ச் சக்திக்கு அதாவது மின்சார சக்திக்கு அதன் ஓட்டத்தில் தடை ஏற்பட்டு உடலில் உள்ள செல்கள் பாதிக்கப்படுகின்றன.அதனால் வலியும் தொந்தரவுகளும் ஏற்படுகின்றன.இத்தகைய சீர்குலைவு ஏற்படும் போது அதை வலி என சொல்லுகிறோம்.சீர்குலைவும் அதிகரிக்குமாயின் அந்த அளவுக்கு உயிர்சக்தியின் செலவு அதிகரிக்கிறது.அதை நோய் என்கிறோம்.இந்த சீர்குலைவு மிகவும் அதிகமாக ஏற்பட்டு உயிர்சக்தி பெரும் அளவில் குறைந்து விடுமாயின் உடலியக்கம் தடைபட்டு அப்படியே நின்றுவிடுவதையே மரணம் என் கிறோம்.
    மேலே கூறியவற்றிலிருந்து உடலை நலத்தோடு வைத்துக் கொள்ள வேண்டுமாயின் உடலுக்கும் உயிர்ச்சக்திக்கும் இடையே உள்ள இரத்தம்,வெப்பம்,காற்று ஆகிய மூன்றுக்கும் ஊறு நேராதபடி பாதுகாத்துக் கொள்வது அவசியமாகிறது.இயற்கைச் சக்திகளின் இயக்கத்தாலோ அல்லது ஐம்புலங்களின் இயக்கத்தாலோ இரத்தம்,வெப்பம்,காற்று ஆகிய மூன்றுக்கும் சீர்குலைவு ஏற்படுகின்றது.உணவு,உறக்கம்,உழைப்பு,பாலுறவு இவற்றை மிகையாக பயன்படுத்துவதாலும்,தவறாகப் பயன்படுத்துவதாலும்,புறக்கணிப்பதாலும்,எண்ணத்தை இயற்கையின் இனிமைக்கு முரணாகப் பயன்படுத்துவதாலும்,பல விதத் தொந்தரவுகள் நேரலாம்.
    · பருவ வேறுபாடு,
    · பாரம்பரிய கருவமைப்புப் பதிவு,
    · வானில் கோள்களின் ஓட்டத்திலும் சேர்க்கையிலும் ஏற்படும் நிலைமாற்றம் இவற்றால் உண்டாகும் காந்த அலை அதிர்வுகள்,
    இவை இயற்கைச் சக்தியால் நேரும் பாதிப்புகள் ஆகும்.இந்த விளைவுகளிலிருந்து காத்துக் கொள்ள இயற்கை,சில தடுப்பு வசதிகளைச் செய்து வைத்திருக்கிறது. இந்த தடுப்பு வசதிகளையும் கடந்து போகும் நிலை உண்டானால் உடல் நலம் கெடுகிறது.பாதிப்புகள் ஏற்படுவதைக் கூடுமான வரை நமது செயல்களாலேயே தடுத்துக் கொள்ள முடியும்.

    சில சமயங்களில் நாம் செயல்படும் போது,சந்தர்ப்பவசத்தால் தடுப்பு நிலையை நாம் கடந்து விடுகிறோம்.இயற்கைச் சக்திகளால் ஏற்படும் விளைவுகளைத் தடுத்துக் கொள்வது சாத்தியம் அன்று.எதிர்ப்புச் சக்தியை(immunity) உயற்த்திக் கொள்ள சில பயிற்சிகளை நாம் செய்ய வேண்டும்.அப்படி செய்வதனால் இயற்கைச் சக்திகளின் விளைவுகளாலும்,நாம் செய்த தவறுகளால் ஏற்படும் விளைவுகளாலும் ,உடல் நலக் கேடு ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.தவிர்க்க முடியாத காரணங்களால்,நோய்வாய்ப் பட நேர்ந்தால் இயற்கைச் சக்திக்கு உதவுவதன் மூலம் நோயை விரைவிலும்,வெற்றிகரமாகவும் குணப்படுத்திக் கொண்டு,உடல் நலத்தை விரைவில் பெற்றிடலாம்.

    ReplyDelete
  3. உடற்பயிற்சிகளில் இரு பகுதிகள் உண்டு:
    1. தேகம் நிற்கும் நிலை(போஸ்சர்)
    2. அசைவுகள்(மூவ்மென்ட்ஸ்)
    நாம் முன்பு குறிப்பிட்ட மூன்று தன்மைகளான இரத்தம்,வெப்பம்,காற்று ஆகியவை மனித உடலில் அடுக்குகளாக உள்ளன.அவை புவிமைய ஈர்ப்புச் சக்தியால் செயல்படுகின்றன.உடல் இருப்பு நிலை(போஸ்சர்) மாறுபட்டால் உடலின் ஒரு பகுதி புவி மையத்தை நோக்கியோ அல்லது அதற்கு எதிர்ப்புரத்திலோ இருப்பதால்,இம்மூன்று தன்மைகளின் இருப்பு நிலையில் மாற்றம் ஏற்படுகிறது.உடலின் ஒரு பகுதியை புவிமையத்தை நோக்கித் திருப்பினால் அந்த பகுதியில் இரத்தம் சிறிது அதிகமாகப் பாய்கிறது.காற்று சிறிது அதிகமாகப் பாய்கிறது. காற்று சிறிது அதிகமானால்,அது உடலின் மறுபகுதிக்குப் பாய்கிறது.இதோடு கூட முறையான அசைவுகள் மூலம் இந்த மூன்று தன்மைகளும் ஒழுங்குபடுத்தப் படுகின்றன.ஒழுங்கான பயிற்சிகள் மூலம் உடலின் பல பகுதிகள் சுத்தப்படுத்தப் படுகின்றன.சரியான உடற்பயிற்சிகளைச் செய்வதன் மூலம் இயற்கைச் சக்திகளால் விளையும் தீயவிளைவுகளைச் சரிபடுத்திக் கொண்டு உடல் நலத்தைப் பெறலாம்.

    நினைவுக்கு எட்டாத காலம் முதற்கொண்டே பருவ நிலை,வாழ்க்கை முறை,இன்னும் இதர பழக்க வழக்கங்கள் ஆகியவற்றைக் கொண்டு பல்வேறு நாடுகளில் பலவகையான உடற்பயிற்சிகள் உருவாகி உள்ளன.முன்பு வாழ்க்கை முறை மெதுவாக ஊரும் (நகரும்) நிலையில் இருந்தால்,அதற்குத் தக்கவாறு உடற்பயிற்சிகள் உருவாக்கப் பயிற்சிகள் உருவாக்கப்பட்டன.அந்தக் காலம் இப்போது மாறிவிட்ட்து.விரைவு ,அழுத்தம்,பரபரப்பு உள்ள சூழ்நிலையில் நாம் வாழ்கிறோம்.நம்து தேவைகளும் வேறு விதமாகி விட்டன.ஆகவே முந்தைய உடற்பயிற்சிகள் இந்தக் காலச் சூழ்நிலைக்கு ஏற்றவையாகாது.

    ReplyDelete
  4. நம் முன்னோர்கள் மனித உடலில் ஏழு சக்தி மையங்கள் இருப்பதாகக் கருதினார்கள். அந்த சக்தி மையங்களை “சக்ரா” என்றழைத்தார்கள். அந்த சக்தி மையங்கள் இருப்பதாக சீனா, திபெத் போன்ற நாட்டு முன்னோர்களும் நம்பி வந்தனர். இந்த “சக்ரா”க்களின் தன்மையைப் பொறுத்தே மனிதர்களின் தன்மையும், ஆற்றலும், அறிவும் அமைகிறதாக அவர்கள் நம்பினார்கள். ஒவ்வொரு சக்ராவும் புறக்கண்ணால் காண முடியாததாக இருந்தாலும் சூட்சும சரீரத்தில் இருக்கும் சக்தி மையங்களாக அவர்கள் அவற்றைக் கண்டதோடு அந்த சக்ராக்களுக்குத் தனித்தனியாக சின்னங்களும், நிறங்களும், மந்திர சப்தங்களும் ஒதுக்கி இருந்தார்கள். ஒவ்வொரு சக்ராவும் தனித்தன்மை கொண்டதாகவும், சில குறிப்பிட்ட சக்திகளை மையமாகக் கொண்டதாகவும், அந்த சக்திகளை உருவாக்கவும், கட்டுப்படுத்தவும் முடிந்ததாகவும் கருதப்பட்டது. குண்டலினி சக்தியும் இந்த சக்ராக்களின் வழியாகத் தான் மேலே எழுகிறது என்றும் சொல்லப்படுகிறது.

    இருபதாம் நூற்றாண்டில் பல மேலை நாட்டு அறிஞர்களும் இந்த சக்ராக்களில் காட்டிய ஈடுபாடும், ரெய்கி போன்ற மாற்று சிகிச்சை முறைகளில் இந்த சக்ராக்களைப் பயன்படுத்தியதும், தியான முறைகளில் பயன்படுத்தியதும் உலகளவில் இந்த சக்ரா முறைகளைப் பிரபலப்படுத்தின.
    இனி ஏழு சக்ராக்களையும் அறிந்து கொள்வோம்.
    1) மூலாதார சக்ரா –

    இது மனித உடலில் ஆசன வாயின் அருகே அமைந்துள்ளதாகக் கருதப்படுகிறது. மரத்திற்கு வேர் எப்படியோ அப்படியே உடல் வலிமைக்கு ஆணிவேராக இந்த சக்ரா விளங்குகிறது. அமைப்பில் நான்கு இதழ் தாமரையுடன் உள்ள இதன் நிறம் சிவப்பு. இது ”லா” என்ற சத்தத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. மந்திரமாக உச்சரிக்கும் போது லாம், லாங் என்ற இரு உச்சரிப்புகளுக்கு இடையே உச்சரிக்கப்படுகிறது. அதாவது லா என்கிற ஒலி பிரதானமாக உச்சரிக்கப்பட்டு அது முடிகிற போது ம்/ங் ஒலிகளின் மெலிதான சேர்க்கையோடு முடிகிறது. இந்த மந்திர ஒலியால் இந்த சக்ரா சக்தி பெறுகிறது. உடல் ஆரோக்கியம், தற்காப்பு ஆகியவற்றிற்கு இந்த சக்ராவின் செயல்பாடு முக்கியம்.
    2) ஸ்வாதிஷ்டானா சக்ரா

    இது மனித உடலில் ஆண்/பெண் குறி பாகத்தில், இன விருத்தி உறுப்புகளை ஒட்டி அமைந்துள்ளது. இது ஆறு இதழ் தாமரை அமைப்பில் ஆரஞ்சு நிறத்தில் அமைந்துள்ளது. இது வா என்ற எழுத்தின் ஒலியை அடிப்படையாகக் கொண்டுள்ளது. மந்திரமாக உச்சரிக்கும் போது இது வாம்/வாங் இவற்றின் இடைப்பட்ட உச்சரிப்பாக இருக்கிறது. அதாவது வா பிரதானமாக உச்சரிக்கப்பட்டு அது முடிகிற போது ம்/ங் ஒலிகளின் மெலிதான சேர்க்கையோடு முடிகிறது. இந்த மந்திர ஒலியால் இந்த சக்ரா சக்தி பெறுகிறது. இனவிருத்தி, அடிப்படை உணர்ச்சிகள், அடிப்படைத் தேவைகள் ஆகியவற்றிற்கு இந்த சக்ராவின் செயல்பாடு சரியாக இருப்பது முக்கியம்.
    3) மணிபுரா சக்ரா

    இது மனித உடலில் தொப்புளுக்குக் கீழ் வயிற்றுப் பகுதியில் அமைந்துள்ளது. இது பத்து இதழ் தாமரை அமைப்பில் மஞ்சள் நிறத்தில் அமைந்துள்ளது. இது ரா என்ற எழுத்தின் ஒலியை அடிப்படையாகக் கொண்டுள்ளது. மந்திரமாக உச்சரிக்கும் போது இது ராம்/ராங் இவற்றின் இடைப்பட்ட உச்சரிப்பாக இருக்கிறது. அதாவது ரா பிரதானமாக உச்சரிக்கப்பட்டு அது முடிகிற போது ம்/ங் ஒலிகளின் மெலிதான சேர்க்கையோடு முடிகிறது. இந்த மந்திர ஒலியால் இந்த சக்ரா சக்தி பெறுகிறது. ஜீரணம், செயலாற்றத் தேவையான சக்தி, எண்ணங்களால் உடலுக்கு ஏற்படும் பாதிப்புகள் ஆகியவை இந்த சக்ராவின் கட்டுப்பாட்டில் வருகின்றன.
    4) அனாஹதா சக்ரா

    இது மனிதனின் நெஞ்சுப்பகுதியில் அமைந்துள்ளது. இது பன்னிரண்டு இதழ் தாமரை அமைப்பில் பச்சை நிறத்தில் உருவகப்படுத்தப்படுகிறது. இது யா என்ற எழுத்தின் ஒலியை அடிப்படையாகக் கொண்டுள்ளது. மந்திரமாக உச்சரிக்கும் போது இது யாம்/யாங் இவற்றின் இடைப்பட்ட உச்சரிப்பாக இருக்கிறது. அதாவது யா பிரதானமாக உச்சரிக்கப்பட்டு அது முடிகிற போது ம்/ங் ஒலிகளின் மெலிதான சேர்க்கையோடு முடிகிறது. இந்த மந்திர ஒலியால் இந்த சக்ரா சக்தி பெறுகிறது. இதயமும், அன்பு, கருணை, இரக்கம் போன்ற மேலான உணர்வுகளும் இந்த சக்ராவின் கட்டுப்பாட்டில் வருகின்றன.

    ReplyDelete
  5. 5) விசுத்தா அல்லது விசுத்தி சக்ரா

    இது மனிதனின் தொண்டைப் பகுதியில் அமைந்துள்ளது இது பதினாறு தாமரை இதழ்கள் கொண்ட தாமரையாக நீல நிறத்தில் இருக்கிறது. இது ஹா என்ற எழுத்தின் ஒலியை அடிப்படையாகக் கொண்டுள்ளது. மந்திரமாக உச்சரிக்கும் போது இது ஹாம்/ஹாங் இவற்றின் இடைப்பட்ட உச்சரிப்பாக இருக்கிறது. அதாவது ஹா பிரதானமாக உச்சரிக்கப்பட்டு அது முடிகிற போது ம்/ங் ஒலிகளின் மெலிதான சேர்க்கையோடு முடிகிறது. இந்த மந்திர ஒலியால் இந்த சக்தி பெறுகிறது. தைராய்டு சுரப்பியும், பேச்சுத் திறனும், எந்த விஷயத்தையும் அடுத்தவருக்குப் புரிய வைக்கும் சக்தியும் இந்த சக்ராவின் செயல்பாட்டைப் பொறுத்து அமைகின்றன.
    6) ஆஜனா சக்ரா

    இது இரு புருவங்களுக்கிடையில் பொட்டு வைக்கும் நெற்றிப் பகுதியில் அமைந்துள்ளது. இதை நெற்றிக் கண் சக்ரா என்றும் அழைக்கிறார்கள். இது கருநீல நிறத்தில் இரண்டு இதழ் தாமரை சின்னத்தில் அமைந்துள்ளது. இது ஓம் என்ற மந்திர சப்தத்தில் சக்தி பெறுகிறது. ஆங்கிலத்தில் aum என்று உச்சரிப்பிற்கிணையாக இந்த ஓம் இருக்கிறது. கூர்மையான, தெளிவான புறப்பார்வை மற்றும் அகப்பார்வை, ஆழ்மன சக்திகள், ஞானத் தெளிவு ஆகியவை இந்தச் சக்ராவின் செயல்பாட்டைப் பொறுத்து அமைகிறது.
    7) சஹஸ்ரரா சக்ரா

    இது தலையின் உச்சிப்பகுதியில் அமைந்துள்ளது. ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை வடிவத்தில் கருஞ்சிவப்பு நிறத்தில் இந்த சக்ரா அமைந்துள்ளது. இது ஆ என்ற எழுத்தில் ஆரம்பித்து ஓம் (aum) என்று முடியும் படியான மந்திர உச்சரிப்பில் பலம் பெறுகிறது. ஆத்ம ஞானம், தெய்வீக சக்திகள் போன்றவை கைகூடுவது இந்த சக்ராவின் குறையற்ற செயல்பாட்டாலேயே.
    இந்த ஏழு சக்ராவின் சின்னங்களையும், மந்திர சப்தங்களையும் கூடுமான வரை மனதில் இருத்துங்கள்.

    ReplyDelete