அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பற்றி நீ கண்டுபிடித்ததெவை?

Share On Facebook ! Share On Goole Plus ! Tweet This !


மக்களால் ஒவ்வொன்றின் பாகங்கள், தனித்தன்மைகள், தொடர்புகள், தாக்கங்கள், திரிபுகள், பயன்கள், மற்றும் மாற்றுகளைப் புலப்படுத்த முடியும். வேறெதைப் புலப்படுத்த முடியும்? ~Disclosables

  1. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

    ஆரம்பத்தில் சினிமா வை பின்னணியில் இருந்து எம் ,ஜி.ராமசந்திரன் , அண்ணாவின் மீது ஏற்பட்ட ஈர்ப்பால் திமுகவில் இணைந்த எம்.ஜி.ஆர். அண்ணாவின் மறைவிற்கு பின் மு. கருணாநிதி திராவிட முன்னேற்றக் கழகத்தலைவராகவும், தமிழ்நாட்டின் முதல்வராகவும் ஆனார். அக்காலத்தில் கட்சியின் பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆர். கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து எம்.ஜி.ஆரால் அண்ணாவின் பெயரில் 1972ல் தொடங்கப்பட்ட இயக்கமே அண்ணா திராவிட முன்னேற்ற கழகம். இக்கட்சி பின்னர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.


    1973ல் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலின்போது சந்தித்தது. இத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் மிக அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்,


    1977 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவும் காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிட்டது , மிக பெரிய வெற்றி பெற்ற இந்த கூட்டணி

    10 ஜூன் 1977-ல் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், இந்த கூட்டணி பிரிந்து , அதிமுக , இந்திய பொதுவுடமைக் கட்சி ,அனைத்திந்திய பார்வார்டு பிளாக், இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக்ஆகிய கட்சிகளுடன் புதிய கூட்டணி அமைத்துப் போட்டியிட்டுப் பெரும்பாலான இடங்களில் வெற்றி கண்டது, முதல் முறையாக எம்.ஜி.ஆர் முதல்வர் ஆனார்

    1980 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அதிமுக , ஜனதா கட்சி (தேசாய் ), காங்கிரஸ் (அர்ஸ்) போன்ற கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து போட்டிபோட்டது , இந்த தேர்தலில் அதிமுகவிற்கு பெரிய பின்னடைவு ஏற்பட்டது ,வெறும் இரண்டு தொகுதியில் வெற்றி பெற்றது அதிமுக

    1980 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,காந்தி காமராஜ் காங்கிரசு, அர்ஸ் காங்கிரசு, ஃபார்வார்ட் ப்ளாக் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து போட்டிபோட்டது , இதில் அமோக வெற்றி பெற்ற அதிமுக , எம்ஜீஆர் மீண்டும் இரண்டாவது முறையாக முதல்வரானார்

    1984 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அதிமுக , பல பிரிவுகளாக பிரிந்திருந்த காங்கிரஸ் மீண்டும் ஓன்று சேர்ந்தது , இந்திய தேசிய காங்கிரசு,காந்தி காமராஜ் காங்கிரசு ஆகிய கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து போட்டிபோட்டது , பெருபான்மை இடங்களில் இந்த கூட்டணி வெற்றி பெற்றது


    1984 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதிமுக , பல பிரிவுகளாக பிரிந்திருந்த காங்கிரஸ் மீண்டும் ஓன்று சேர்ந்தது , இந்திய தேசிய காங்கிரசு,காந்தி காமராஜ் காங்கிரசு ஆகிய கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து போட்டிபோட்டது , பெருபான்மை இடங்களில் இந்த கூட்டணி வெற்றி பெற்றது , மூன்றாம் முறையாக முதல்வரானார் எம்ஜீஆர்

    இந்த காலகட்டத்தில் எம் ஜி ஆர் முழு மூச்சாக ஈழ போராட்டத்தை ஆதரித்தார்

    டிசம்பர் 24, 1987 அன்று தமிழக முதல்வராக இருந்த மரணமடைந்தார். இதை தொடர்ந்து எம்ஜியாரின் மனைவி ஜானகி ராமச்சந்திரன் முதல்வரானார். ஆனால் அதை கட்சியின் மற்றொரு முக்கிய தலைவரான ஜெ. ஜெயலலிதா ஏற்கவில்லை, ஆட்சியும் கலைக்கப்பட்டது ,

    இதற்கு பிறகு அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்தது , அதிமுக (ஜா ) , அதிமுக (ஜே ) என பிரிந்ததால் கட்சியின் சின்னமான இரட்டை இலை சின்னத்தை இழந்தது

    1989 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ,
    அதிமுக (ஜே ) , இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உடனும் கூட்டணி அமைத்தும்
    அதிமுக (ஜா ),தமிழக முன்னேற்ற முன்னணி உடனும் கூட்டணி அமைத்து போட்டியிட்டது

    அதிமுக (ஜே ), அணி 27 இடங்களில் வெற்றி பெற்று எதிர்கட்சி அந்தஸ்து பெற்றது , பின் இரு அணிகளும் சேர்ந்து மீண்டும் அதிமுக ஜெ. ஜெயலலிதா தலைமையில் இரண்டாம் அத்தியாத்தை தொடங்கியது

    ReplyDelete
  2. 1991 ஆம் ஆண்டு மே-ஜூன் மாதங்களில் பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவும் காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிட்டது, ராஜீவ் மரணத்தால் மிக பெரிய வெற்றி பெற்றது இந்த கூட்டணி

    1991ஆம் ஆண்டு ஜூன் மாதம் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவும் காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிட்டது ஜீவ் மரணத்தால் மிக பெரிய வெற்றி பெற்றது இந்த கூட்டணி , முதல் முறையாக ஜெ. ஜெயலலிதா தமிழகத்தின் முதல்வரானார்.

    அதிமுக தனது ஐந்தாண்டு ஆட்சி காலத்தில் பல ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி மக்களிடையே செல்வாக்கிழந்தது. ஜெயலலிதா மற்றும் அவரது அமைச்சர்கள் சர்வாதிகாரப் போக்கில் செயல்படுவதாகவும் மக்களிடையே கடும் அதிருப்தி நிலவியது. ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணத்தின் போது நடைபெற்ற ஆடம்பர நிகழ்வுகள் வாக்காளர்களின் அதிருப்தியை அதிகப்படுத்தின.

    1996 ஆம் ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவும் காங்கிரஸ் கட்சியும் கூட்டணி , இந்த தேர்தலில் தமிழக காங்கிரசு பிளவுபட்டு ஜி. கே. மூப்பனார் தலைமையில் ஒரு பிரிவினர் கட்சியை விட்டு வெளியேறி தமிழ் மாநில காங்கிரசு (தமாக) என்ற புதிய கட்சியைத் தொடங்கினர், இதனால் காங்கிரஸ் செல்வாக்கும் குறைந்தது , படுதோல்வி நடந்தது இந்த கூட்டணி

    1996ஆம் ஆண்டு மே மாதம் சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுகவின் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு, காங்கிரஸ் பலமிழந்த காரணத்தாலும் தோல்வியை தழுவியது

    1998 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் பாராளுமன்ற தேர்தலில் இந்த தேர்தலில் அதிமுக காங்கிரஸ் கட்சியை கைவிட்டுவிட்டு பாஜக தலைமையிலான கூட்டணியில் இணைந்தது , மேலும் வைகோவின் மதிமுக கட்சி அலுவலகத்திற்க்கே சென்று ஜெயா கூட்டணியில் சேர்த்து கொண்டார் , இந்த தேர்தலில் அதிமுக , பாஜக , மதிமுக , பாமக , சுப்பிரமணியன் சாமியின் ஜனதா கட்சி, வாழப்பாடி ராமமூர்த்தியின் தமிழக ராஜீவ் காங்கிரசு , ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட அதிமுக பல தொகுதிகளில் வெற்றி பெற்றது
    மத்திய அமைச்சரவையிலும் இடம்பெற்றது

    1999 ஆம் ஆண்டு செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் பாராளுமன்ற தேர்தலில் பாஜக அரசை கவிழ்த்து விட்டு அதிமுக மீண்டும் காங்கிரஸ் யுடன் கூட்டணி அமைத்தது , இந்த தேர்தலில் அதிமுக ,காங்கிரஸ் , இந்திய கம்யூனிஸ்ட்மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட அதிமுக ௧௦ தொகுதியில் வெற்றி பெற்றாலும் கூட்டணி வெற்றி பெறவில்லை

    2001ஆம் ஆண்டு மே மாதம் சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரசு, பாமக, இந்திரா காங்கிரசு,இந்திய கம்யூனிஸ்ட் (சிபிஐ), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (சிபிஎம்), எல். சந்தானத்தின்ஃபார்வார்ட் ப்ளாக் ஆகியவை இடம் பெற்றிருந்தன வலுவான கூட்டணி, எதிர் அணி ஜாதிகட்சி கூட்டணி என்பதாலும் அதிமுக மீண்டும் வென்று , ஜெயா இரண்டாவது முறையாக ஜெ. ஜெயலலிதா தமிழகத்தின் முதல்வரானார்.இந்த காலகட்டத்தில் அரசு ஊழியர்களின் பெருத்த வெறுப்பை பெற்றார் ஜெயா

    2004 ஆம் ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் பாராளுமன்ற தேர்தலில் இந்தமுறை மறுபடியும் பாஜக கூட்டணியில் இணைந்த அதிமுக , போட்டிவிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது

    2006ஆம் ஆண்டு மே மாதம் சட்டப்பேரவைத் தேர்தலில் , 2001 -2006 காலப்பகுதியில் அரசு ஊழியர்களின் வெறுப்பை பெற்றார் ஜெயா , இந்தமுறை அதிமுக ,மதிமுக , விடுதலை சிறுத்தைகள் உடன் கூட்டணி அமைத்து சொல்லிகொள்ளும் வளவிற்கு வெற்றி பெற்றது , மாறாக திமுக பெருமான்மை பெற விடாமல் இருந்தது

    2009 ஆம் ஆண்டு மே மாதம் பாராளுமன்ற தேர்தலில் அதிமுக ஏற்கனவே கூடயிருந்த மதிமுக உடன் இந்திய கம்யூனிஸ்ட் ,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ,பாமக சேர்த்து வலுவான கூட்டணி அமைத்தது , ஈழ பிரச்சனையும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என நினைத்தபோது , பணபலத்தால் திமுக-காங்கிரஸ் கூட்டணியே வென்றது

    2011 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 சட்டப்பேரவைத் தேர்தலில் ஐந்து வருடம் தங்களோடு இருந்த மதிமுக வை கடைசிவரை தொகுதி ஒதுக்காமலே கூட்டணியில் இருந்து வெளியேற்றி விட்டது , மேலும் பாமக ஏற்கனவே வெளியேறிவிட்டது , புதிதாக அதிமுக , நடிகர் விஜயகாந்த் யின் தேமுதிக , இந்திய கம்யூனிஸ்ட் ,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் , மனிதநேய மக்கள் கட்சி, நடிகர் சரத் குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, புதிய தமிழகம், மூவேந்தர் முன்னேற்ற முன்னணி, ஃபார்வார்டு ப்ளாக், இந்திய குடியரசுக் கட்சி, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை, மூவேந்தர் முன்னணிக் கழகம் கூட்டணி அமைத்து கடைசிவரை குழப்பத்திலே இருந்த கூட்டணி , திமுகவின் குடும்ப , ஊழல் ஆட்சி காரணமாக அமோக வெற்றி பெற்ற அதிமுக ஆரம்ப முதலே சறுக்கல் நிலைபாடுகளோடு ஆட்சி நடத்துகிறது ,

    இப்போதைக்கு வலுவாக இருக்கும் அதிமுக, வரும் காலங்களின் அதன் நிலையை , நடப்பு அரசியல் நிலவரங்களில் பார்ப்போம்

    ReplyDelete